சர்கார் சர்ச்சை காட்சிகள் நீக்கப்படும்: திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

 

சர்கார் சர்ச்சை காட்சிகள் நீக்கப்படும்: திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

‘சர்கார்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை: ‘சர்கார்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படம் கடும் சர்ச்சைகளை கடந்து தீபாவளிக்கு ரிலீசானது. சர்கார் படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து, கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், வில்லியாக நடித்துள்ள வரலக்ஷ்மியின் கதாபாத்திரத்திற்கு வைக்கப்பட்ட கோமளவள்ளி என்ற பெயர், தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, சர்ச்சைக்குரிய காட்சிகள் பிற்பகலுக்கு பிறகு நீக்கப்பட்டு திரையிடப்படும். காச்டிகள் நீக்கப்பட்ட பிறகே திரையிடப்படும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.