சர்காரில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை

 

சர்காரில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை: சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம், முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாக உருவாகியுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இதில் வரலட்சுமியின் கதாபாத்திரத்தின் பெயர் கோமலவள்ளி. பெற்ற தந்தைக்கே விஷம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு கோமலவள்ளியின் கதாப்பாத்திரம் கொடூரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, கோமளவள்ளி என்ற பெயர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்பதால் அதிமுகவிற்குள் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், சர்க்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளதாக அரசுக்கு தகவல் வந்துள்ளதாகவும் அந்த காட்சிகளை நீக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லது கிடையாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.