சரியான வயதில் காதல் செய்வது தவறே இல்லை – த்ரிஷா

 

சரியான வயதில் காதல் செய்வது தவறே இல்லை – த்ரிஷா

சென்னை எண்ணூரில் உள்ள சமுதாய நல கூடத்தில் குழந்தைகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

சென்னை எண்ணூரில் உள்ள சமுதாய நல கூடத்தில் குழந்தைகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

அருணோதயா தொண்டு நிறுவனம் மற்றும் யுனிசெப் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகை திரிஷா கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழுப்புணர்வை  ஏற்படுத்தினார். அதன்பின் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகளோடு கலந்துரையாடினார்.

Trisha

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை த்ரிஷா, “குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும், அதற்கான பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவே இங்கு வந்துள்ளேன். குழந்தை திருமணத்தை தடுக்க பெண் குழந்தைகளுக்கு கல்வி கட்டாயமாக வழங்க வேண்டும். 

காதல் செய்வது தவறு இல்லை. ஆனால் அதை சரியான வயதில் செய்வது நல்லது. சிறுவயதில் காதல் செய்து திருமணம் செய்தால் அது அவர்களுக்கு தான் பிரச்சனையாக அமையும். எனவே குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்” என தெரிவித்தார்.