சரவண பவன் காபி சுவை மாறிவிட்டது! – இயக்குநர் சீனு ராமசாமியின் கவலை
ஹோட்டல் சரவண பவனின் காபி சுவையும் மணமும் மாறிவிட்டதாக இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்திருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஹோட்டல் சரவண பவனின் காபி சுவையும் மணமும் மாறிவிட்டதாக இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்திருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஹோட்டல் சரவண பவனின் சுவையும் தரமும் ராஜகோபால் அண்ணாச்சியின் கடைசிக் காலத்திலேயே மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டு உண்டு. ராஜகோபால் அண்ணாச்சியின் முழு கட்டுப்பாட்டில் இருந்தபோது இருந்த சுவை, தரம் தற்போது எந்த சரவண பவன் ஹோட்டலிலும் இல்லை என்று அலுத்துக்கொள்பவர்கள் அதிகம். ஆனாலும், பழைய சரவண பவன் மீதான நம்பிக்கையிலேயே அங்கு வாடிக்கையாளர்கள் செல்வது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
சரவணபவன் காபியின் மணமும் சுவையும் ஒரு வாராமாக மாறிவிட்டது என்றேன் இதெற்கெல்லாமா வருந்துவது நாட்டின் பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கு என்றனன் என் உதவியாளன்.
பழக்கம் தான் ருசியை உண்டாக்குகிறது
நான் அல்ல
என் நாக்கல்ல என்றேன்.#SaravanabhavanCoffeeArmy— Seenu Ramasamy (@seenuramasamy) February 8, 2020
இந்த நிலையில், சரவண பவன் காபியின் மணமும் சுவையும் மாறிவிட்டது என்று பிரபல இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்தள்ளார். அதில், “சரவணபவன் காபியின் மணமும் சுவையும் ஒரு வாரமாக மாறிவிட்டது என்றேன் இதெற்கெல்லாமா வருந்துவது நாட்டின் பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கு என்றனன் என் உதவியாளன். பழக்கம் தான் ருசியை உண்டாக்குகிறது நான் அல்ல என் நாக்கல்ல என்றேன்.” என்று கூறியுள்ளார்.
பலரும் இதற்கு லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.