‘சமூகவலைத்தளங்களில் இருப்பவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள்’: பிரபல நடிகை ஓபன் டாக்!

 

‘சமூகவலைத்தளங்களில் இருப்பவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள்’: பிரபல நடிகை ஓபன் டாக்!

சமூகவலைத்தளங்களில் இருப்பார்கள் எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்கள் என்று பிரபல நடிகை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: சமூகவலைத்தளங்களில் இருப்பார்கள் எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்கள் என்று பிரபல நடிகை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கார்த்தியின் ‘தீரம் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரகுல் ப்ரீத் சிங். தற்போது இவர்  நடிப்பில் கடைசியாக வெளியான படம் சூர்யாவின் ‘என்.ஜி.கே’. மேலும் இவர் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

என்ன தான் படங்களில் பிஸியாக இருந்தாலும் மறக்காமல் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார். இதற்கிடையில் இவர் சமீபத்தில் பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rakul

அவர் கூறியதாவது, ‘சமூக வலைத்தளங்களில் வேலை வெட்டி இல்லாதவர்கள் தான் அதிகமாக உள்ளனர். நம்மால் அனைவரையும் திருப்திப் படுத்த முடியாது, நம்மைப் பற்றிக் குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள், அதைப் பற்றி கவலைப் படக்கூடாது. மேலும் தாய் சொல்லைத் தட்டாதீர்கள் என்று ரசிகர்களுக்கு  அட்வைஸ்யும் கொடுத்துள்ளார்.