சமாதானமா?சவாலா? சாய்ஸ் யுவர்ஸ்! : சீமானுக்கு எச்சரிக்கை விடுத்த ராகவா லாரன்ஸ்

 

சமாதானமா?சவாலா? சாய்ஸ் யுவர்ஸ்! : சீமானுக்கு எச்சரிக்கை விடுத்த ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 

நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் தொல்லை

seeman

நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும், தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார். இந்நிலையில் லாரன்ஸ் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் தமக்கும், தன்னுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும்  தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். 

கொச்சையாகவும், அசிங்கமாகவும்  பதிவிடுகிறார்கள்!
 

இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், அதில்,  உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் எனது சேவை சம்பந்தப்பட்ட பதிவுகள் போடப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற வலைதளங்களில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில்….. தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், அசிங்கமாகவும் நாலாந்தர நடையில் பதிவிடுகிறார்கள்! அது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது ஏதேனும் பொது நிகழ்ச்சிகளுக்கு நான் போகும்போது கூட, உங்களது ஒரு சில தொண்டர்கள் அங்கு வந்து மிகவும் நாகரீகமற்ற முறையில் மறைமுகமாக பேசுகிறார்கள்! இவையெல்லாம், எப்பொழுது நீங்கள் மேடையில் என்னைப் பற்றி தவறாக பேசினீர்களோ, அப்பொழுதிருந்தே இது நடந்து வருகிறது…..  நான் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை! ஆனால்…. மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க,
நிகழ்ச்சி நடத்த எங்கு சென்றாலும், அவர்களை சொல்லொண்ணா வார்த்தைகளாலும் செயல்களாலும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மனம் புண்படும்படி பேசுகிறார்கள்!’ என்று கூறியுள்ளார்.

எல்லை மீறி போகிறது

மேலும் அந்த பதிவில், ‘இவ்வளவு நாள் பொறுமையாக தான் இருந்தேன் ஆனால் உங்களது ஒரு சில தொண்டர்களின் செயல்பாடுகள் தற்பொழுது எல்லை மீறி போகிறது…இறுதியாக ஒன்றை மட்டும் உறுதிபட கூறுகிறேன்…..எனக்கு எது நடந்தாலும் அதைத் தாங்கிக் கொள்வேன்! ஆனால்… மாற்றுத்திறனாளிகளான என் பசங்களுக்கும் பாசமிக்க எனது ரசிகர்களுக்கும், ஏதாவது ஒரு சிறு தொந்தரவு ஏற்பட்டாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது! ஏனென்றால் அவர்கள் எனது பிள்ளைகள் மாதிரி!

 

சமாதானமா?சவாலா முடிவை நீங்களே எடுங்கள்! சாய்ஸ் யுவர்ஸ்

raghva

இந்த எனது அறிக்கையின் மூலமாக உங்களுக்கு எந்த வித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தான் உங்களது பெயரை இங்கு குறிப்பிடவில்லை!
தயவுசெய்து என்னையும் எனது மாற்று திறனாளி பிள்ளைகளின் மன உணர்வுகளையும், புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நான் கூறுவது சரி என்று நினைத்தால் என்னை அழைத்து பேசுங்கள். இல்லை, இதை பிரச்சனையாகத்தான் நானும் எனது தொண்டர்களும் அணுகுவோம் என நீங்கள் முடிவெடுத்தால்…. 
அதற்கும் நான் தயார்! சமாதானமா?சவாலா முடிவை நீங்களே எடுங்கள்! சாய்ஸ் யுவர்ஸ் !’ என்று எச்சரிக்கை விடும் தொனியில் பதிவிட்டுள்ளார்.

சீமானுக்கு சவால் விடுவது அநாகரீகம்

seeman

பெயரை குறிப்பிடவில்லை என்றாலும்அவரின் பதிவின் மூலமே இது சீமானை குறிக்கிறது என்பது தெளிவாகிறது. லாரன்ஸின் இந்த பதிவிற்கு சீமானின் தொண்டர்களோ, சீமானுக்கு சவால் விடுவது அநாகரீகம். சீமான் கருணாநிதி ஜெயலலிதா ரஜினிகாந்த் போன்றவர்களுக்கே சவால் விட்டவன் என்பதை மறந்து விடவேண்டாம் என்று நாம் தமிழர் பிள்ளைகள் உங்களை எச்சரிக்கின்றோம்’ என்று சிலர் கருத்து  கூறி வருகிறார்கள். 

இதையும் வாசிக்க: காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு, ஆண்கள் கொடுத்த கொடூர தண்டனை: வைரல் வீடியோ!