சமாதனம் பேச சென்ற அண்ணனுக்கு தம்பி மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவு…இரும்புக்கம்பியால் அடித்து கொன்ற பயங்கரம்!

 

சமாதனம் பேச சென்ற அண்ணனுக்கு  தம்பி மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவு…இரும்புக்கம்பியால் அடித்து கொன்ற பயங்கரம்!

குமரேசனுக்கு தெரியவர அவர் இருவரையும் கண்டித்துள்ளார். இருப்பினும் இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். 

சென்னை ஜாபர்கான்பேட்டை நாகாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் குமரேசன். இவருக்கும் மனைவி   சண்முகப்பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு   சண்முகப்பிரியா பிரிந்து சென்றுள்ளார். இதுகுறித்து சைதாப்பேட்டையில் வசிக்கும் தனது அண்ணன்  ராஜேஷிடம் குமரேசன் கூறி மனைவியை சமாதானம் செய்து தன்னுடன் வாழ வைக்க  உதவுமாறு கேட்டுள்ளார். 

rtn

இதனால்  சண்முகப்பிரியாவிடம் ராஜேஷ் சமாதானம் பேச சென்ற நிலையில் இருவருக்கும் இடையே நெருக்கம்  ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இது குறித்து சில நாட்கள் கழித்து குமரேசனுக்கு தெரியவர அவர் இருவரையும் கண்டித்துள்ளார். இருப்பினும் இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். 

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ராஜேஷ் தன்னுடைய வீட்டுக்கு சண்முகப்பிரியாவை அழைத்து கொண்டு வந்து உல்லாசமாக இருந்துள்ளார். இது குமரேசனுக்கு தெரியவர அவர் ராஜேஷை இரும்புகம்பியால் தலையில் ஓங்கி அடித்துள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்  ராஜேஷை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் ராஜேஷ் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

ttn

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குமரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.