சபாநாயகர் மீது காகிதத்தை கிழித்தெறிந்த 7 காங்கிரஸ் எம்பிக்கள் இடைநீக்கம்!

 

சபாநாயகர் மீது காகிதத்தை கிழித்தெறிந்த 7 காங்கிரஸ் எம்பிக்கள் இடைநீக்கம்!

மக்களவையில் அநாகரிகமாக நடந்துக் கொண்டதாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 7 காங்கிரஸ் எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

மக்களவையில் அநாகரிகமாக நடந்துக் கொண்டதாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 7 காங்கிரஸ் எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் டெல்லி வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் அவையில் அமளி எழுந்ததால் சுமார் 2 மணி நேரம் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணி நேரத்திற்கு பிறகு அவை கூடியவுடன், ராஜஸ்தானைச் சேர்ந்த லோக்தந்திரிக் கட்சியின் எம்.பி. ஹணுமான் பெனிவால், சோனியா காந்தியின் குடும்பம் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி, காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Congress MPs

மேலும், அவையை நடத்திக் கொண்டிருந்த தற்காலிக சபாநாயகர் ரமாதேவி மீது சில காதிதங்களையும் வீசினர். இதனால் மீண்டும் ஒரு மணிநேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது. அவையில் அநாகரீகமாக நடந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், கவுரவ் கோகாய், டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், ஆர்.உன்னிதன், பென்னி பெக்னன் ஆகிய காங்கிரஸ் எம்பிக்களை சபாநாயகர் ஓம்பிர்லா இடைநீக்கம் செய்வதாக அறிவித்தர். இவர்கள் 7 பேரும் நடப்பு மக்களவைத் தொடர் முழுவதுமிலிருந்தும்நீக்கப்பட்டனர்.