சபரிமலை விவகாரம்; பாஜக தொடர் உண்ணாவிரதம்

 

சபரிமலை விவகாரம்; பாஜக தொடர் உண்ணாவிரதம்

சபரிமலை விவகாரம் தொடர்பாக பாஜக காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளது.

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரம் தொடர்பாக பாஜக காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் தீர்ப்பை நடைமுறைப்படுத்தியே தீருவது என கேரள அரசு உறுதியாக இருக்கிறது. இதனால் அம்மாநில அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் இவ்விவகாரம் தொடர்பாக கேரள சட்டமன்றத்திலும் தொடர்ந்து அமளி ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  சபரிமலை விவகாரத்தில்கேரள அரசின் அணுகுமுறையை கண்டித்து, பாஜக சார்பில் காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. திருவனந்தபுரத்தில், தலைமை செயலகம் எதிரில், பாஜக எம்.பி. சரோஜ் பாண்டே உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் இருந்து பாஜக பிரமுகர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்கிறார்கள்.