சபரிமலை சர்ச்சையில் சிக்கிய பெண்ணியவாதி ரெஹானா பாத்திமா: வைரல் போட்டோஸ்!

 

சபரிமலை சர்ச்சையில் சிக்கிய பெண்ணியவாதி ரெஹானா பாத்திமா: வைரல் போட்டோஸ்!

சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரெஹானா பாத்திமா இரு முடியுடன் கோயிலுக்குள் செல்ல முயன்ற போது போராட்டக்கரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர், சில பெண்கள் சபரிமலை செல்ல முயன்றனர். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்கள், அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். அந்த வகையில், கொச்சியைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரெஹானா பாத்திமா இரு முடியுடன் கோயிலுக்குள் செல்ல முயன்ற போது போராட்டக்கரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

rehana

அதுமட்டுமின்றி  ஃபேஸ்புக்கில் மத உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் புகைப்படம் பதிவிட்ட வழக்கில் ரெஹானா பாத்திமாவை கேரளா போலீசார்  கைது செய்தனர்.  இப்படி குறிப்பிட்ட காலத்திற்கு ரெஹானா பாத்திமாவின் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

rehnana

சமீபத்தில்  சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். உச்ச நீதிமன்றம் ஆய்வுக்கு பிறகு தீர்ப்பை  உறுதி செய்யும்  நம்பிக்கை இருப்பதாக ரெஹானா பாத்திமா தெரிவித்திருந்தார்.  தற்போது இந்த வழக்கானது 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் என்ற நிலை தொடர்கிறது. இதனால் பெண்ணியவாதிகள் சபரிமலைக்கு செல்ல ஆயுத்தமாகியுள்ளனர்.

rehana

இந்நிலையில் ரெஹானா பாத்திமாவின் சர்ச்சையான புகைப்படங்கள் இணையத்தில் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது.

rehanaa

 

reh

ஒருவேளை ரெஹானா பாத்திமா சபரிமலைக்கு செல்ல மீண்டும் முயற்சி மேற்கொள்ளும் பட்சத்தில் மீண்டும் சர்ச்சை வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.