சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறப்பு!

 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறப்பு!

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று மீண்டும் நடை திறக்கப்பட்டது. 

கேரளா :

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக கடந்த மாதம் நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. 

sabarimalai

அதனையடுத்து கடந்த 27 ஆம் தேதி மண்டல பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது . அதன் பின்னர் அன்றையதினம் பல்வேறு பூஜைகள் மற்றும் நெய் அபிஷேகங்கள் நடைபெற்றது.

அதனையடுத்து அன்று இரவு 11 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டது. மண்டல பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதே போல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை வருகிற 14 ஆம் தேதி நடைபெறுகிறது . இதற்காக நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.

அதனையடுத்து இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளான கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் போன்றவை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14 ஆம் தேதி மாலையில் நடைபெறுகிறது.

magaravilakku

இதையொட்டி, மகர விளக்கு தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் வருகிற 12 ஆம் தேதி பந்தளம் வலிய கோயிக்கல் கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்படுகிறது.

அதனையடுத்து 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும்.அதன் பின்னர் 20 ஆம் தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனத்திற்கு பின் கோயில் நடை அடைக்கப்படும்.

சபரிமலையில் தொடர் போராட்டம் காரணமாக அங்கு பக்தர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருவதால் கடந்த மாதம் முதல் சபரிமலை, பம்பை, நிலக்கல் மற்றும் இலவுங்கல் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.