சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: சீராய்வு மனுத் தாக்கல் செய்ய முடிவு

 

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: சீராய்வு மனுத் தாக்கல் செய்ய முடிவு

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்ய நாயர் சேவை சமூகத்தினர் முடிவு செய்துள்ளனர்

திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்ய நாயர் சேவை சமூகத்தினர் முடிவு செய்துள்ளனர்.

கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். ஆனாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என அறிவித்துள்ள கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும், இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி நவம்பர் 16-ம் தேதி முதல் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்ய நாயர் சேவை சமூகத்தினர் முடிவு செய்துள்ளனர். கேரள அரசும், தேவசம்போர்டும் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் அச்சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.