சபரிமலையில் பெண்களுக்கு தனி ஐயப்பன் கோவில் கட்டி தரப்படும்: பிரபல நடிகர் அறிவிப்பு!

 

சபரிமலையில் பெண்களுக்கு தனி ஐயப்பன்  கோவில் கட்டி தரப்படும்: பிரபல நடிகர் அறிவிப்பு!

சபரிமலையில் பெண்கள் வழிபாடு செய்வதற்கு தனியாக ஐயப்பன் கோவில் கட்டித் தரப்படும் என்று நடிகர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

கேரளா: சபரிமலையில் பெண்கள் வழிபாடு செய்வதற்கு தனியாக ஐயப்பன் கோவில் கட்டித் தரப்படும் என்று நடிகர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் கேரளா மாநிலத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதுவரை கோவிலுக்குள் ஒரு பெண்ணை கூட அனுமதிக்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சபரிமலையில் மத்திய அல்லது மாநில அரசுகள்  இடம் ஒதுக்கிக் கொடுத்தால் பெண்களுக்காகத் தனி ஐயப்பன் கோவில் அமைத்துத் தர திட்டமிட்டுள்ளதாக நடிகர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

பெண்களுக்காக அமைக்கப்படும் இந்த கோவிலியில் உண்டியல் இருக்காது என்றும், பெண் ஒருவரே பூசாரியாக நியமிக்கப்படுவார் என்று கூறியுள்ள அவர், இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யும் ஐயப்பன் சிலை நாடு முழுவதும் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.