சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் அறிவிப்பால் நஷ்டம்… புலம்பும் நடிகை அனுஷ்கா!

 

சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் அறிவிப்பால் நஷ்டம்… புலம்பும் நடிகை அனுஷ்கா!

விசாகபட்டினத்தில் ரியல் எஸ்டேட் சரியாக இருக்காது என்று நினைத்து வாங்கிய நிலத்தை அனுஷ்கா விற்றுவிட்டதாகவும் ஜெகன் மோகன் ரெட்டியின் புதிய அறிவிப்பால் விசாகபட்டினத்தில் நிலங்கள் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் லாபம் போச்சே என்று அவர் புலம்பி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. 

விசாகபட்டினத்தில் ரியல் எஸ்டேட் சரியாக இருக்காது என்று நினைத்து வாங்கிய நிலத்தை அனுஷ்கா விற்றுவிட்டதாகவும் ஜெகன் மோகன் ரெட்டியின் புதிய அறிவிப்பால் விசாகபட்டினத்தில் நிலங்கள் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் லாபம் போச்சே என்று அவர் புலம்பி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. 

anushka

தமிழ், தெலுங்கில் மிக பிரபலமான நடிகையாக வலம்வந்தவர் அனுஷ்கா. சினிமாவில் ஆண் நடிகர்கள் உடலை ஏற்றி இறக்குவது போல, தன்னாலும் முடியும் என்று காட்ட உடல் எடையைத் தாறுமாறாக உயர்த்தினார் அனுஷ்கா. ஆனால், எதிர்பார்த்தது போல அவரால் உடல் எடையைக் குறைக்க முடியவில்லை. இதனால், பல பட வாய்ப்புகள் அவரைவிட்டுப் போனது.

anushka

ஐதராபாத்தில் பிரம்மாண்ட ஃபிளாட் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியிருந்தார் அனுஷ்கா. தெலங்கானா தனி மாநில பிரச்னை இருந்ததால் நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி குறைந்த விலைக்கு அந்த ஃபிளாட்டை விற்றுவிட்டார். தற்போது, தெலங்கானா தனி மாநிலமாகிவிட்டது. ஐதராபாத்தில் நிலம் மற்றும் சொகுசு குடியிருப்புக்கள் விலை ஏறிவிட்டது. அநியாயமாக குறைந்த விலைக்கு விற்றுவிட்டோமோ என்று அனுஷ்கா புலம்புவதாக கூறப்பட்டது.

naidu

இந்த நிலையில், சினிமாவில் சம்பாதித்த பணத்தை எல்லாம் ஆந்திராவில் நிலங்கள் வாங்கி முதலீடு செய்திருக்கிறாராம் அனுஷ்கா. குறிப்பாக விசாகபட்டினத்தில் நிலம் வாங்கியிருக்கிறார் அனுஷ்கா. சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் புதிய தலைநகராக அமராவதி இருக்கும் என்று அறிவித்ததால், விசாகபட்டினத்தில் வாங்கிய நிலத்தை எல்லாம் அப்போதே விற்றுவிட்டாராம். இப்போது, ஆந்திராவின் நிர்வாகத் தலைநகரமாக விசாகபட்டினம் இருக்கும் என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறியிருப்பதால் விசாகபட்டினத்தில் ரியல் எஸ்டேட் தாறுமாறாக அதிகரித்துள்ளதாம். அவசரப்பட்டுவிற்றுவிட்டோமே என்று அனுஷ்கா வருத்தத்திலிருந்தாராம்.

jegan

வாங்கியதை விட அதிக விலைக்குத்தானே விற்றாய்… இதில் வருத்தப்பட என்ன உள்ளது. ரியல் எஸ்டேட்டால் லாபம் தானே என்று நெருக்கமானவர்கள் அனுஷ்காவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனராம்.