சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இரங்கல் குறிப்பு வாசித்தார் ஆளுநர்…

 

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இரங்கல் குறிப்பு வாசித்தார் ஆளுநர்…

தமிழகத்தில் 15 ஆவது சட்டப்பேரவையின் எட்டாவது கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.

தமிழகத்தில் 15 ஆவது சட்டப்பேரவையின் எட்டாவது கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் 10 நாட்களாவது நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜன.9 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

ttn

இன்று காலை தொடங்கும் கூட்டத்தில், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று நேற்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் படி, இன்று காலை 10 மணிக்குத் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சபாநாயகர் தனபால் இரங்கல் குறிப்பு வாசித்தார். அதனைத் தொடர்ந்து, பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் 15 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியது. இதன் பின்னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பெற்று விவாதம் தொடங்கும்.