சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு: என்னென்ன விஷயங்கள் பேசப்பட்டது?

 

சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு: என்னென்ன விஷயங்கள் பேசப்பட்டது?

2-ம் தேதியன்று கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், இன்றுடன் நிறைவடைவதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

சென்னை: 2-ம் தேதியன்று கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், இன்றுடன் நிறைவடைவதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரானது கடந்த 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடங்கிய அன்றே பொங்கல் பரிசுத் தொகை குறித்த சிறப்பு அறிவிப்பை தன் உரையில் வெளியிட்டு ஆளுநர் பேசினார்.

kalaignar

அதனைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, சட்டப்பேரவையின் மூத்த உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். வரலாற்றில் முதல்முறையாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினருக்கு முதல்வரும், துணை முதல்வரும் இரங்கல் தெரிவித்து 20 நிமிடங்கள் உரையாற்றியது இதுவே முதல்முறையாகும்.

assembly

அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் மேகதாது அணை பிரச்னை, சாத்தூர் பெண்ணிற்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம், ஸ்டெர்லைட் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

அதேபோல், ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாகவும் சட்டப்பேரவையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. இன்று மிக முக்கிய அறிவிப்பாக, விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை பிரித்து தனி மாவட்டமாக முதல்வர் பேரவையில் அறிவித்தார். இதையடுத்து, சட்டப்பேரவை இன்றுடன் நிறைவடைவதாக கூறிய பேரவைத் தலைவர் தனபால், அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.