சசிகலா வெளியே வந்தாலும் அது நடக்காது… மொத்தமாக ஆப்பு வைத்த எடப்பாடி-ஓ.பி.எஸ்..!

 

சசிகலா வெளியே வந்தாலும் அது நடக்காது… மொத்தமாக ஆப்பு வைத்த எடப்பாடி-ஓ.பி.எஸ்..!

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரால் இன்னும் 5 வருஷத்துக்கு கட்சியில் எந்த லாபியும் செய்ய முடியாது.

டி.டி.வி.தினகரனும், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் எல்லோரும் தம் பக்கம் வருவார்கள். அதை பயன்படுத்தி கட்சியின் பொதுச் செயலாளர் ஆகிவிடுவார். காரணம் இப்போதுள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்களில் பலர் இவரது சிபாரிசின் பெயரில்தான் பதவியில் உள்ளதாக வதந்திகள் இறக்கை கட்டி பறந்தன.

sasikala

சசிகலா வெளியில் வந்தாலும் யாருடைய ஆதரவும் அவருக்கு செல்லாமல் தனித்துவிடப்பட வேண்டும் என்று நினைத்துதான் உட்கட்சி தேர்தலில் போட்டியிட 5 வருஷம் கட்சியின் அடிப்படை உறுப்பினராக பதவியில் இருக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டு வந்து இருக்கிறார்கள்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரால் இன்னும் 5 வருஷத்துக்கு கட்சியில் எந்த லாபியும் செய்ய முடியாது. டி.டி.வி.தினகரன் தரப்பு ஸ்லிப்பர் செல்கள் மட்டுமில்லாமல் அங்கிருந்து தற்போது அதிமுகவுக்கு திரும்பியவர்களும் இன்னும் 5 வருஷத்துக்கு உட்கட்சி தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் கட்சியில் சேர்ந்தால் பதவி கிடைக்கும் என்ற தலைவலிக்கு நிரந்தரமாக குட்பை சொல்லி இருக்கிறார்கள் இரட்டையர்களான எடப்பாடி – ஓ.பிஎஸ்.