சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை – அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி 

 

சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை – அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி 

சிறையிலிருந்து வெளிவந்த பின் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை. இதே நிலையே தொடரும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சிறையிலிருந்து வெளிவந்த பின் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை. இதே நிலையே தொடரும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “சசிகலாவை ஆட்சியில், கட்சியிலும் சேர்க்கக்கூடாது என ஒருமித்த கருத்து எடுக்கப்பட்டுள்ளது. சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை. இதே நிலையே தொடரும். நடிகர்கள் இனி ஆட்சிக்கு வரவே முடியாது. கமல் திரைப்படத்தில் நடித்தால் மட்டும் முதல்வராகிவிட முடியாது. சீமான் கூறும் 40 திருடர்கள் திமுகவினர்தான்.  

Jayakumar

திமுக ஆட்சியில் சென்னையில் தலைமை செயலக கட்டிடம் 9 மடங்கு அதிக பணம் செலவு செய்து கட்டப்பட்டுள்ளது . ஸ்டாலினின் குடும்ப சொத்துகளை வைத்து ஒரு பட்ஜெட்டே போடலாம். காங்கிரசில் குமரி ஆனந்தனுக்கு சீட் கொடுக்காதது நாங்குநேரி தொகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  இஸ்லாமியர்களுடன் உள்ளத்தளவில் உறவு வைத்துள்ளோம். உதட்டோடு வைக்கவில்லை. எனவே நாங்குநேரியில் இஸ்லாமியர்களின் வாக்குகள் எங்களுக்கு தான்” என்று கூறினார்.