சசிகலா, டிடிவியை தவிர யார் வேண்டுமானாலும் வரலாம்: அமைச்சர் ஜெயக்குமார்

 

சசிகலா, டிடிவியை தவிர யார் வேண்டுமானாலும் வரலாம்: அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா, டிடிவி தினகரனை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு வரலாம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை: சசிகலா, டிடிவி தினகரனை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு வரலாம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தினகரன் அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டதை அடுத்து அவர் அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். ஆளுங்கட்சியை தீவிரமாக எதிர்த்து வரும் சூழலில் அக்கட்சியை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், எதிரிகளுக்கு இடம் கொடுக்காமல் அதிமுக திருந்தி வந்தால் அமமுக – அதிமுக இணைந்து பணியாற்றலாம் அது இருகட்சிகளுக்கும் பலம்தான் என கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் பேச்சுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், பந்திக்கே அழைக்கவில்லை ஆனால் வாழை இலை ஓட்டை என தங்க தமிழ்ச்செல்வன் கூறுகிறார். அவருக்கு ஆசை இருக்கலாம். கடல் போல் இருக்கும் அதிமுக நதிகள் வந்து சேர்வதில் தவறில்லை. ஆனால் சசிகலா, டிடிவி தினகரனை தவிர யார் வேண்டுமானாலும் மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றார்.