சசிகலாவின் பினாமி பெயரில் உள்ள 1,500 ஏக்கர் நிலத்தில் விமான நிலையம்!
சென்னை பரந்தூர் பகுதியில் சசிகலாவின் பினாமி பெயரில் உள்ள 1500 ஏக்கர் நிலத்தில் விமான நிலையம் அமைக்கலாம் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சென்னை பரந்தூர் பகுதியில் சசிகலாவின் பினாமி பெயரில் உள்ள 1500 ஏக்கர் நிலத்தில் விமான நிலையம் அமைக்கலாம் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய விவசாயிகள், காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பரந்தூர் பகுதியில் சசிகலாவின் பினாமி பெயரில் உள்ள 1500 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை கையகப்படுத்தி விமான நிலையம் அமைக்கலாம்” எனக்கூறினர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சசிகலா ஏராளமான ஏராளமான அசையா சொத்துகளை வாங்கினார் என்பது வருமான வரித்துறையினர் அளித்த தகவலின் மூலம் தெரியவந்தது குறிப்பிடதக்கது.