சசிகலாவின் அண்ணி இளவரசி வீட்டில் தங்கம் கொள்ளை: உண்மை நிலவரம் என்ன?

 

சசிகலாவின் அண்ணி இளவரசி வீட்டில் தங்கம் கொள்ளை: உண்மை நிலவரம் என்ன?

சசிகலா அண்ணன் மனைவி இளவரசியின் நுங்கம்பாக்கம் வீட்டில் அரை கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சசிகலா அண்ணன் மனைவி இளவரசியின் நுங்கம்பாக்கம் வீட்டில் அரை கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் அவரது அண்ணன் மனைவியான இளவரசியும் அடைக்கப்பட்டுள்ளார்.

இளவரசிக்கு சென்னை நுங்கம்பாக்கம் ராமநாதன் தெருவில் சொந்தமாக வீடு இருக்கிறது. அவர் சிறையில் இருப்பதால், பிரசன்னா என்ற ஊழியர் தான் வீட்டை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் இருந்த அரை கிலோ தங்கம் கொள்ளை போயுள்ளதாக நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் பிரசன்னா புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார், எப்படி கொள்ளை அடிக்கப்பட்டது, புதிதாக வீட்டிற்கு வந்த நபர்கள் யார் என்பது தொடர்பாக காவலாளியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.