சங்கத்தை திட்டமிட்டு பூட்டவில்லை: எஸ்.வி.சேகர்

 

சங்கத்தை திட்டமிட்டு பூட்டவில்லை: எஸ்.வி.சேகர்

தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தை யாரும் திட்டமிட்டு பூட்டு போடவில்லை என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

சென்னை: தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தை யாரும் திட்டமிட்டு பூட்டு போடவில்லை என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் மீது அதிருப்தியில் இருந்த தயாரிப்பாளர்கள் சிலர், சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். அந்த பூட்டை அகற்ற முயன்ற சங்க தலைவர் விஷால் போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததையடுத்து, கைது செய்யப்பட்ட பின் விடுவிக்கப்பட்டார்.

tfpc

இது தொடர்பாக விஷால் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் விஷால் மீதான கைது நடவடிக்கையை கண்டித்த சென்னை உயர் நீதிமன்றம், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடனடியாக அகற்ற உத்தரவிட்டது.

tfpc

இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை கிண்டி தாசில்தார் ராம்குமார் அகற்றினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எதிரணியைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பூட்டு போட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

tfpc

அவர் கூறுகையில், தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு திட்டமிட்டு பூட்டு போடவில்லை, உணர்ச்சிவசத்தால் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தை பூட்டிவிட்டனர். தயாரிப்பாளர்கள் கேட்ட கேள்விக்கு விஷால் முறையாக பதிலளித்திருந்தால் இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது என்று தெரிவித்தார்.

மேலும், விஷால் மீது யாரும் ஊழல் புகார் சுமத்தவில்லை; முறைகேடு என்பது பணம் மட்டுமே சார்ந்த விஷயம் இல்லை என்றும் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.