சங்கடங்களை போக்க சம்மணமிட்டு உட்காருங்கள்!

 

சங்கடங்களை போக்க சம்மணமிட்டு உட்காருங்கள்!

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்க வைத்த படியே தான் அதிகமாக அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேருந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் ஒரு நாளில் நாம் அதிகமான நேரங்களில் நமது கால்களைத் தொங்க வைத்துக் கொண்டே தான் இருக்கிறோம்.

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்க வைத்த படியே தான் அதிகமாக அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேருந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் ஒரு நாளில் நாம் அதிகமான நேரங்களில் நமது கால்களைத் தொங்க வைத்துக் கொண்டே தான் இருக்கிறோம். இப்படிக் காலைத் தொங்க வைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்க வைத்து அமரும் பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது.

exercise

நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும் பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும் பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும். மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல் பகுதியில் தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப் போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது. நிஜத்தில் எல்லா இடங்களிலும் நம்மால் சம்மணமிட்டு அமர முடியாது. அப்படிப்பட்டவர்கள் இனி சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். மேல்நாடுகளில் குளிர்பிரதேசம் என்பதால், அவர்கள் உணவு மேஜைகளைப் பயன்படுத்தி வந்தார்கள். நம் நாட்டிலும் உணவகங்களில் நாம் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட முடியாது. தினமும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தை இதற்கென ஒதுக்கிக் கொள்ளுங்கள். வீட்டில் உணவருந்தும் போது சம்மணமிட்டு அமருங்கள். தினந்தோறும் பூஜையறையில் சம்மணமிட்டு அரை மணி நேரமாவது அமர்ந்து பூஜைகள், தியானத்தைச் செய்து வாருங்கள். ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறும். பல ஆரோக்கிய குறைபாடுகளுக்கு நாம் அமரும் முறையும் முக்கியக் காரணமாக இருக்கிறது. சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் கால்களுக்கே அதிகமாக செல்கிறது.

sit

இந்திய வகை கழிவறை செல்லும் போது மட்டும் தான் காலை மடக்கி அமர்கிறோம். வெஸ்டர்ன் டைப் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவுகள் வெளியேறும், அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள். 
நம்மால் சம்மணங்கால் போட்டுக் கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே முடிந்த வரை காலை தொங்க வைத்து உட்காருவது, யுரோப்பியன் கழிவறைகளை பயன்படுத்துதல் இவற்றை  தவிர்க்க வேண்டும். கட்டிலிலோ, நாற்காலிகளிலோ அமரும் போது, முடிந்த வரையில் சம்மணம் இட்டே உட்காரலாம்.