சகோதரனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி ! தந்தையை மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் !!

 

சகோதரனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி ! தந்தையை மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் !!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பச்சாபூர் கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமியை அவரது அண்ணனே பலமுறை மிரட்டி கடந்த 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த சிறுமி ஒருவரை அவரது அண்ணனே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக தந்தைக்கும் கொலை மிரட்டல் விடுத்ததால் பயந்து போன அந்த சிறுமி தற்கொலை செய்துகொண்டார். 
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பச்சாபூர் கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமியை அவரது அண்ணனே பலமுறை மிரட்டி கடந்த 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.  இந்த சம்பவம் தந்தைக்கு தெரியவர தந்தை மகன்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக தந்தையையும் மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிசில் அந்த சிறுமியின் இளைய சகோதரர் புகார் அளித்துள்ளார். 
இதுகுறித்து வட்ட அலுவலர் தெரிவிக்கையில் சிறுமி விவகாரத்தை வெளியில் சொல்லக்கூடாத என தந்தையை பலமுறை மிரட்டியும் அவதூறு வார்தைதைகள் பேசியும் உள்ளார் அந்த சகோதரர் என கூறினார். வழக்கை விசாரித்த போலீசார் அந்த சிறுமியின் சகோதரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.