கோவை ரயில் நிலையத்தில் மேற்கூரை இடிந்து இருவர் பரிதாப பலி!

 

கோவை ரயில் நிலையத்தில் மேற்கூரை இடிந்து  இருவர் பரிதாப பலி!

கோவை ரயில் நிலையத்தின் அருகே உள்ள அலுவலகத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். 

கோவை ரயில் நிலையத்தில் மேற்கூரை இடிந்து  இருவர் பரிதாப பலி!

கோவை: கோவை ரயில் நிலையத்தின் அருகே உள்ள அலுவலகத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். 

கோவை ரயில் நிலையத்தின் பின்புறம் கூட்ஸ் ரோட்டில் ரயில்வே பார்சல் அலுவலகம் உள்ளது.ரயில்வேக்கு சொந்தமான இந்த அலுவலக கட்டிடத்தில், இருசக்கர வாகனம் பார்சல் மற்றும் பொருட்கள் வைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வந்துள்ளது. 

இந்நிலையில் தொடர் மழை காரணமாக பலத்த காற்று வீசியதில்  இந்த கட்டிடம் இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது இடர்பாடுகளில் சிக்கிய  ஒப்பந்த பணியாளர்கள் பவளமணி, இப்ராகிம் மற்றும் வடமாநில தொழிலாளி  ராஜூ ஆகிய 3  பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் இப்ராஹிம் மற்றும் பவளமணி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் வடமாநில தொழிலாளி ராஜூ  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த விபத்து குறித்த விசாரணையில் இறங்கியுள்ள காவல்துறை இடர்பாடுகளை அகற்றும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.