கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது!
Oct 23, 2020, 23:32 IST1603476135000
தாடிக்கொம்பு அகர முத்தாலம்மன் கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் முத்தாலம்மன் கோவில் வரலாற்றுத் தகவல்கள் இருக்கும் கல்வெட்டின் மீது சிலுவை போஸ்டர் ஒட்டப்பட்டது குறித்து தாடிக்கொம்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். போஸ்டரில் இருந்த இணையதள முகவரி மூலம் விசாரணை மேற்கொண்டதில், மாரம்பாடி தெற்கு தெருவை சேர்ந்த அந்தோணி பாஸ்கர்(35) என்பவர்தான் போஸ்டர் ஒட்டியது தெரியவந்தது. அவரை கைது செய்த தாடிக்கொம்பு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.