கோவிலுக்குச் சென்ற பெற்றோர்.. தற்கொலை செய்து கொண்ட மகன் : வீடு திரும்பிய போது காத்திருந்த அதிர்ச்சி!

 

கோவிலுக்குச் சென்ற பெற்றோர்.. தற்கொலை செய்து கொண்ட மகன் : வீடு திரும்பிய போது காத்திருந்த அதிர்ச்சி!

சமீப காலமாகப் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது.

சமீப காலமாகப் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. மாணவர்களின் தற்கொலைகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. இந்நிலையில், தாம்பரத்தைச் சேர்ந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

சென்னை மேற்குத் தாம்பரம் அடுத்த மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகன் பாலாஜி(17) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான தங்கவேலு மற்றும் அவரது மனைவி நேற்று வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர். பின்னர், நேற்று மாலை வீடு திரும்பிய அவர்கள், ஒரு அறையின் கதவு உள்பக்கமாகப் பூட்டியிருந்ததைக் கண்டு குழப்பமடைந்து கதவை தட்டியுள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்துப் பார்த்துள்ளனர். அப்போது பாலாஜி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். 

ttn

அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சத்தமிட, வீட்டின் அருகிலிருந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பாலாஜிக்கு பள்ளியில் ஏதேனும் பிரச்னையா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.