கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் சென்ற மேலும் 68 பேருக்கு கொரோனா உறுதி!

 

கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் சென்ற மேலும் 68 பேருக்கு கொரோனா உறுதி!

வியாபாரிகள் மூலம் காய்கறிகளை வாங்கிச் சென்ற மக்களுக்கு கொரோனா பரவும் அபாயம் நிலவுகிறது.

தமிழகத்திலேயே அதிகமாக சென்னையில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. அதனால் சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் இருந்த இடங்களை முடக்கி, மக்கள் அங்கு செல்லாத வண்ணம் பாதுகாத்து வருகிறது. சென்னையில் ராயபுரம், திருவிக நகர் உள்ளிட்ட இடங்களில் அதிகமாக கொரோனா பாதிப்பு இருப்பினும் கோயம்பேடு மார்க்கெட் வியாபரிகளுக்கு கொரோனா வைரஸ் பரவியது சென்னை வாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியது. ஏனெனில் வியாபாரிகள் மூலம் காய்கறிகளை வாங்கிச் சென்ற மக்களுக்கு கொரோனா பரவும் அபாயம் நிலவுகிறது. 

ttn

அதனால் மற்ற மாவட்டங்களில் கோயம்பேடு வியாபாரிகள் மூலம் கொரோனா பரவாமல் இருக்க, மற்ற மாவட்டங்களுக்கு சென்ற வியாபாரிகளை கண்டறியும் பணி மும்முரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன் தினம், கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கடலூர் சென்ற 107 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 160 ஆக இருந்தது. இந்நிலையில், கோயம்பேட்டில் இருந்து கடலூருக்கு சென்ற மேலும் 68 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் சென்ற  810 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.