கோடீஸ்வரியை தொகுத்து வழங்கும் முதல் பெண் ராதிகா! வாழ்த்து தெரிவித்த அமிதாப் பச்சன்… 

 

கோடீஸ்வரியை தொகுத்து வழங்கும் முதல் பெண் ராதிகா! வாழ்த்து தெரிவித்த அமிதாப் பச்சன்… 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள கோடீஸ்வரி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகை ராதிகா சரத்குமாருக்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் வாழ்த்து கூறியுள்ளார்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள கோடீஸ்வரி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகை ராதிகா சரத்குமாருக்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் வாழ்த்து கூறியுள்ளார்.

radhika

பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளவுள்ள கோடீஸ்வரி நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களின் அறிவுக்கூர்மை, விழிப்புணர்வு அறிவுக்கூர்மை, விழிப்புணர்வு ஆகியவை சோதிக்கப்படும். வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்கப்படவுள்ள கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கேட்கப்படும் 14 கேள்விகளுக்கு சரியான பதிலைச் சொல்பவருக்கு ரூ.1 கோடி பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்துவழங்கவுளார்.

Amitabh Bachchan

இந்த நிகழ்ச்சியை அமிதாப்பச்சன் முதலில் தொகுத்து வழங்கினார். பின்னர் தமிழில் நடிகர் சரத்குமார், சூர்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் தொகுத்து வழங்கினார்கள். அந்த வரிசையில் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் இந்நிகழ்ச்சியை முதன் முதலில் ஒரு பெண், தொகுத்து வழங்கவுள்ளார். 

 

 

இது குறித்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வழி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன்,  “ராதிகா அவர்களுக்கு வணக்கம். திரைப்படங்களில் நடிகனாக உங்களுடன் பணியாற்றி இருக்கிறேன். நீங்கள் கோடீஸ்வரி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறீர்கள் என்பதையும் தாண்டி உங்களை வாழ்த்த பல காரணங்கள் இருக்கின்றன. கோடீஸ்வரி நிகழ்ச்சியின் வரலாற்றில் நீங்கள் தான் முதல் பெண் தொகுப்பாளராக இருக்கப் போகிறீர்கள். இது இந்திய அளவில் மட்டுமல்ல சர்வதேச கோடீஸ்வரி நி நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே பங்குபெறக்கூடிய இந்நிகழ்ச்சி தனித்துவமானது மட்டுமல்ல பாராட்டுதலுக்கும் உரியது. இது நிச்சயம் பெண்களுக்கு ஊக்கமளிக்கக் கூடியதாக இருக்கும். உங்களுக்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுக்கும் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.