கோடி கோடியாய் அள்ளிக் கொடுத்த அத்தி வரதர்… குளத்துக்குள் பதுக்கிய அதிகாரிகள்..!

 

கோடி கோடியாய் அள்ளிக் கொடுத்த அத்தி வரதர்…  குளத்துக்குள் பதுக்கிய  அதிகாரிகள்..!

லட்சக்கணக்கில் கமிஷன் பார்த்து விட்டார்கள். அதுமட்டுமல்ல ஒவ்வொரு அர்ச்சகரும் தலா 7 கோடி ரூபாயை கல்லாக்கட்டி இருக்கிறார்கள்.

அத்தி வரதரால் பக்தர்களுக்கு புண்ணியம் கிடைத்ததோ  இல்லையோ? அதிகாரிகளுக்கு நன்றாகவே வரும்படி கிடைத்து விட்டது.
 
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் வைபவம்  48 நாட்கள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தரப்பில் செய்திருந்தார்கள். அதே நேரம் கழிப்பறை, குடிநீர், புதிய சாலை வசதி உள்ளிட்ட பணிகளை காஞ்சிபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்திருந்தார்கள். இதற்காக மாவட்ட நிர்வாகம், கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கீடு செய்தது. 

ஆனால், பணிகளை ஏனோ தானோ என்று  ஒப்புக்கு செய்து விட்டு நகராட்சி அதிகாரிகள் பலர், லட்சக்கணக்கில் கமிஷன் பார்த்து விட்டார்கள். அதுமட்டுமல்ல ஒவ்வொரு அர்ச்சகரும் தலா 7 கோடி ரூபாயை கல்லாக்கட்டி இருக்கிறார்கள்.  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா சம்பாதித்தது மட்டும் 50 கோடி ரூபாய் அளவுக்கு இருக்குமாம். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் வருமானம் அதை விட இரண்டு மடங்கு என்கிறார்கள்.