கொலை செய்து உடல்களை பாலத்தில் தொங்க விட்ட கொடூரம்
மெக்சிகோவின் மிக்கோகன் மாநிலத்தின் உருவாபன் என்ற நகரில் உள்ள பாலத்தில் 9 பேரின் சடலங்கள் கட்டித் தொங்க விடப்பட்டு இருந்தன.
மெக்சிகோவின் மிக்கோகன் மாநிலத்தின் உருவாபன் என்ற நகரில் உள்ள பாலத்தில் 9 பேரின் சடலங்கள் கட்டித் தொங்க விடப்பட்டு இருந்தன. இதன் அருகே, சாலையோரத்தில் 10 பேரின் உடல்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. சிலர் துப்பாக்கியால் சுடப்பட்டும், சிலர் தூக்கில் தொங்கவிடப்பட்டும், சிலர் அரை நிர்வாண நிலையிலும் கொல்லப்பட்டு இருந்தனர்.
இந்த உடல்களுக்கு அருகே இருந்த பேனரில் ‘ஜலிஸ்கோ’ என்ற போதை பொருள் கடத்தல் கும்பலின் தொடக்க எழுத்துக்கள் மட்டும் எழுதப்பட்டிருந்தன. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர கொலை தொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில் இது ‘வயாகரா’ என்ற மற்றொரு போதை கடத்தல் கும்பலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த கொலைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தனர்.