கொரோனா வைரஸ் பீதி.. திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு!

 

கொரோனா வைரஸ் பீதி.. திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு!

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிற்கும் வந்து விட்டது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிற்கும் வந்து விட்டது. இந்தியாவில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாக 5 ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்குத் தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. அதுமட்டுமின்றி எல்லையோர மாவட்டங்களில் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பால் வரும் 29 ஆம் தேதி நடக்கவிருந்த திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ttn

திமுகவில் தற்போது காளியாக உள்ள பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு புதிய உறுப்பினரைத் தேர்வு செய்வதற்காகப் பொதுக்கூட்டம் வரும் 29ஆம் தேதி நடக்கவிருந்தது. தற்போது கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், பொதுக்கூட்டத்தை ஒத்திவைப்பதாகவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில்  நடைபெறவிருந்த அனைத்து திமுக கட்சி கூட்டங்களையும் ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.