கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்

 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

நியூயார்க்: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவை போலவே அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 350-ஐ கடந்துள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ttn

நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89-ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆண்ட்ரூ கூமோ தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கலிபோர்னியா, ஹவாய் ஆகிய மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.