கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 31,411ஆக உயர்ந்தது… தீவிரமடையும் கொரோனா வைரஸ் பரவல்..

 

கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 31,411ஆக உயர்ந்தது… தீவிரமடையும் கொரோனா வைரஸ் பரவல்..

நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 31,411ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 1,840 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது பெரும் கவலை அளித்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக நேற்றும் மட்டும் புதிதாக 1,840 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதற்கு முன் கடந்த 23ம் தேதியன்று அதிகபட்சமாக ஒரே நாளில் 1,755 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.

கொரோனா  வைரஸ்

நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நேற்று மட்டும் அம்மாநிலத்தில் புதிதாக 729 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குஜராத் (226) டெல்லி (206), தமிழ்நாடு (121) ஆகிய மாநிலங்களிலும் நேற்று புதிதாக கொரோனா வைரஸ் கேஸ்கள் பதிவாகி உள்ளன.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 3 மாநிலங்களில் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லி ஆகியவை உள்ளன. 
மாநிலங்கள்    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்
மகாராஷ்டிரா    9,318
குஜராத்               3,774
டெல்லி               3,314