கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது….

 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது….

நம் நாட்டில் நேற்று மட்டும் புதிதாக 4,713 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பரவல் நினைத்து பார்க்காத அளவில் இருக்கிறது.

கொரோனா வைரஸ்

மாநில அரசுகளின் லேட்டஸ்ட் அறிக்கையின்படி, நேற்று மட்டும் நம் நாட்டில் புதிதாக 4,713 பேருக்கு தொற்று நோயான கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இதுவரை நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,00,392 ஆக உயர்ந்துள்ளது. 12 நாட்களுக்கும் சிறிது கூடுதலான காலத்தில் கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை 

மேலும் தொற்று நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,103ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒருபுறம் கவலை அளித்தாலும், 38,908 போ் கொரோனாவிலிருந்து குணம் அடைந்துள்ளனர் என்ற செய்தி சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது. அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 38.8 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர்.