கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 821ஆக உயர்ந்தது…. நேற்று மட்டும் 43 பேர் பலி

 

கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 821ஆக உயர்ந்தது…. நேற்று மட்டும் 43 பேர் பலி

கொரோனா வைரஸால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனாவால் பாதிக்கபட்டவர்களை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் உயிர் இழப்புவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்
மாநிலங்களின் ஒட்டு மொத்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில், நம் நாட்டில் கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 821ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் கொரோனாவுக்கு 43 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிராதான் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் நேற்று மட்டும் புதிதாக 22 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

கொரோனா உயிர்பலி

மாநிலங்கள்              கொரோனாவால் உயிர் இழந்தவர்கள் (நேற்று மட்டும்)
மகாராஷ்டிரா                        22        
மத்திய பிரதேசம்                 06
குஜராத்                                    06
ராஜஸ்தான்                            03
ஆந்திர பிரதேசம்                   02
டெல்லி                                    01
தமிழ்நாடு                                01
ஜம்மு அண்டு காஷ்மீர்        01
உத்தர பிரதேசம்                     01
மொத்தம்                                   43