கொரோனா வார்டில் வேலை செய்ய விரும்பாத பெண் ஊழியர் தற்கொலை முயற்சி!

 

கொரோனா வார்டில் வேலை செய்ய விரும்பாத பெண் ஊழியர் தற்கொலை முயற்சி!

கள்ள குறிச்சியை சேர்ந்த 24 வயது பெண் கொரோனா வார்டில் தட்டச்சாரக பணிபுரிந்து வருகிறார்.

விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில், கள்ள குறிச்சியை சேர்ந்த 24 வயது பெண் கொரோனா வார்டில் தட்டச்சாரக பணிபுரிந்து வருகிறார். அந்த மருத்துவமனையில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பெண்ணுக்கு அங்கு பணிபுரிய விருப்பமில்லை என்பதால் மருத்துவமனை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. 

ttn

அதனால் மனமுடைந்த அந்த பெண், அங்கிருந்த சானிடைசரை குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் உடனே அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். இதனிடையே மருத்துவமனைக்கு வந்த அந்த பெண்ணின் உறவினர், மருத்துவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.