கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட இருவர் உயிரிழப்பு!

 

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட இருவர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

tt

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ள  வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையானது 283லிருந்து 365ஆக உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.1% என்ற நிலையிலேயே உள்ளது” எனக்கூறினார்.

tt

இந்நிலையில் கடலூர் மற்றும் ஈரோட்டில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட இருவர் இன்று உயிரிழந்துள்ளனர்.  கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த 75 வயது முதியவர் உயிரிழந்த நிலையில்  ஈரோட்டில் பி.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மற்றொரு  75 வயதான  முதியவர் ஒருவரும் இறந்துள்ளார்.  இருப்பினும் இவர்களின் ரத்த பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. அது வந்த பிறகே இவர்களின் மரணம் கொரோனாவால் நிகழ்ந்ததா என்பது தெரியவரும்.