கொரோனா மையமாக மாறிய கோயம்பேடு சந்தை மூடப்படுகிறது!

 

கொரோனா மையமாக மாறிய கோயம்பேடு சந்தை மூடப்படுகிறது!

சென்னை கோயம்பேடு சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவியதால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருமழிசை சேட்டிலைட் நகரத்திற்கு கோயம்பேடு சந்தை மாற்றப்பட்டுள்ளது.  இதையடுத்து திருமழிசையில் கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

இதுதொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையி, “கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் சிலருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கோயம்பேடு சந்தை நாளை 05.05.2020 முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.பொதுமக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களை சென்றடையவும் சென்னை திருமழிசையில் வருகின்ற (7.5.2020) வியாழக் கிழமை முதல் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

கோயம்பேடு சந்தை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் திருமழிசை காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு வந்து காய்கறிகளை வாங்கி கொள்ளலாம். பொதுமக்களின் பாதுகாப்புக்கு மேற்கொள்ளப்படும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.