கொரோனா பாதிப்பு; மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்ற சுகாதார ஆய்வாளரை தாக்கிய 6 பேர் கைது!

 

கொரோனா பாதிப்பு; மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்ற சுகாதார ஆய்வாளரை தாக்கிய 6 பேர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஊத்து கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதை போல, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஊத்து கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து அவரும் அவரது குடும்பத்தினர் 5 பேரும் கடந்த 5 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சுகாதார ஆய்வாளர் காளிராஜ் கடந்த சனிக்கிழமை சென்றிருக்கிறார். அப்போது அப்பகுதி மக்கள் அவரை தாக்கி, செல்போன் மற்றும் பைக்கை சேதப்படுத்தி அவரை அவதூறாக பேசியுள்ளனர். 

ttn

அதில் படுகாயம் அடைந்த காளிராஜ், கயத்தாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனைப்பற்றி அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிராஜை தாக்கிய நபர்களை தேடி வந்தனர். அவர்கள் சிக்காத நிலையில், அவர்களை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதன் பின்னர், காளிராஜை தாக்கிய அனிஷ், மைதீன்,ஆசிக், யூசுப், நவாஸ்கான்,ஜலால் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அதில் இன்னும் சிலர் கைது செய்யப்படாத நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.