கொரோனா பாதிப்பு; அமைப்புசாரா தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்த வேண்டும்… பிரதமருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

 

கொரோனா பாதிப்பு; அமைப்புசாரா தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்த வேண்டும்… பிரதமருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ‘கொரோனா’ வைரஸால் தமிழக அரசின் புள்ளிவிவரப்படி 9 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 450க்கும் மேற்பட்டோர் அறிகுறிகளுடன் ‘தனிமைப்படுத்தப்பட்டு’ கண்காணிக்கப்படுகிறார்கள்.கொரோனா அச்சத்தை எதிர்கொள்ள தடை உத்தரவு பிறப்பிப்பதுடன், ஏழை எளிய மக்களுக்கு ரேஷனில் பொருட்கள் கிடைப்பதையும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரு மாத சம்பள உதவித் தொகையும், அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளமும் கிடைக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகரும் மக்கள் நீதிமய்ய தலைவருமான கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

 

 

இதுதொடர்பாக ட்விட்டரில் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ள கமல்ஹாசன், “கொரோனா தடுப்பால் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இழப்பீடு தொகையை அமைப்புசாரா தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.