கொரோனா நிவாரணத்துக்கு ரூ.25,000 வழங்கிய மோடியின் தாய்!

 

கொரோனா நிவாரணத்துக்கு ரூ.25,000 வழங்கிய மோடியின் தாய்!

பிரதமர் மோடியின் தாய் ஹீரா பென் பிரதமரின் கேர் நிதிக்கு தன்னுடைய சேமிப்பில் இருந்து ரூ.25 ஆயிரத்தை வழங்கினார்.

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள பொது மக்கள் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதன் அடிப்படையில் முன்னணி நிறுவனங்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் கோடிக் கணக்கில் நிதி உதவியை அறிவித்து வருகின்றனர். இதற்காக புதிதாக பி.எம் கேர்ஸ் என்ற கணக்கும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிதி சேவைக்கு பிரதமரின் தாய் ஹீரா பென் தன்னுடைய சேமிப்பில் இருந்து ரூ.25 ஆயிரத்தை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

முன்னதாக, “பி.எம் கேர்ஸ் நிதிக்கு நிதி உதவி செய்யுங்கள் என்று ஒவ்வொரு இந்தியர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த நிதியானது தற்போது மற்றும் எதிர்காலத்தில் நிகழும் இதுபோன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள உதவும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.