கொரோனா தொற்றுள்ள இருவர் தப்பி ஓட்டம்

 

கொரோனா தொற்றுள்ள இருவர் தப்பி ஓட்டம்

தமிழகத்தில் இன்று மேலும் 102 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று மேலும் 102 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா அறிகுறியுடன் 3,684 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 2,789 பேருக்கு பாதிப்பு இல்லை என தமிழக அரசு தெரிவித்தது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

coronavirus

இந்நிலையில்  சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் இருவருக்கு கொரோனா உறுதி என தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இருவரும் மருத்துவமனையிலிருந்து தப்பிவிட்டனர் என மருத்துவமனை நிர்வாகமும், சுகாதார்த்துறையும் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளது