கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

 

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

சென்னையில் மாநகராட்சியுடன் இணைந்து, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நோட்டீஸ்

இதுதொடர்பாக மாநகாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட 3,000 வீடுகள் உள்ளன. இவர்கள் அனைவரும்  கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இனிமேல் தொற்று அறிகுறி அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் வீடுகளின் கதவில் உள்ளே நுழையாதே என்ற நோட்டீஸ் தமிழக அரசு சார்பில் ஒட்டப்படவுள்ளது. இது போன்ற மாநகராட்சியின் கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஆர்வமுள்ள தனி நபர்களும் பங்கேற்கலாம்” என்றும் அறிவித்துள்ளது.