கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்:  முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

கொரோனா  பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை கொரோனாவால்  தமிழகத்தில் 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா  பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை கொரோனாவால்  தமிழகத்தில் 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதனிடையே கடந்த 24 ஆம் தேதி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

ttn

தற்போது நாளையுடன் ஊரடங்கு முடிவுக்கு வரவுள்ளது.  இதை தொடர்ந்து ஒடிசா, பஞ்சாப், மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம்  போன்ற மாநிலங்களின் முதல்வர்கள் ஊரடங்கை நீடித்து உத்தரவிட்டுள்ளனர்.  இருப்பினும் இதுகுறித்து தமிழக முதல்வர் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ முடிவையும் எடுக்கவில்லை. 

tt

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று காலை 10 மணிக்கு  தலைமைச் செயலகத்தில்  ஆலோசனை நடத்தவுள்ளார்.  நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  கொரோனாவை தடுக்க மீண்டும்  ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசிக்கவுள்ளதாக தெரிகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.