கொரோனா தடுப்பு… ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் பிரதமர் ஆலோசனை!

 

கொரோனா தடுப்பு… ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் பிரதமர் ஆலோசனை!

கொரோனா பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி மாநில முதல்வர்கள், அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று அவர் சமூக நல அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆர்.எஸ்.எஸ், பதஞ்சலி உள்ளிட்ட பொது நல அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.
கொரோனா பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி மாநில முதல்வர்கள், அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று அவர் சமூக நல அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினார்.

modi-on-video-conference

வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் ஆர்.எஸ்.எஸ், பதஞ்சலியின் பாபா ராம்தேவ், தாவூத் போரா கம்யூனிட்டி, பிரம்ம குமாரிகள் உள்ளிட்ட பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் பேசினார். 
அப்போது அவர், மொத்த தேசமும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துகொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மகாத்மா காந்தி கூறுவது போல, ஏழைகளுக்கு உதவுவதே தேசத்துக்கு செய்யும் மிகப்பெரிய சேவை என்பது போல, சமூக நிறுவனங்கள் அனைத்தும் ஏழைகளுக்கு சேவை செய்து வருவது பாராட்டுக்குரியது என்றார்.