“கொரோனா குணமான நபரை ஊருக்குள் விடமாட்டோம்” : பழனியில் போராட்டம் செய்த மக்கள்!

 

“கொரோனா குணமான நபரை ஊருக்குள் விடமாட்டோம்” : பழனியில் போராட்டம் செய்த மக்கள்!

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் வசித்த வீடுகளைச் சுற்றிய பகுதிகள் முழுவதும் தனிமை படுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால் 1242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டத்தில் 65 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  பழனியில் 5பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் வசித்த வீடுகளைச் சுற்றிய பகுதிகள் முழுவதும் தனிமை படுத்தப்பட்டுள்ளது. 

tt

இந்நிலையில் பழனி, அண்ணாநகர் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் குணமாகி மீண்டும் பழனிக்கு சென்றார். இதையறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதிவாசிகள்,  அவரை ஊருக்குள் அனுமதிக்கக்கூடாது என்று கூறி   எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

tt

இதுகுறித்து தகவலறிந்து வந்த மருத்துவர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பொதுமக்கள் அதை ஏற்க மறுத்ததால், வேறு வழியின்றி  குணமடைந்த நபரை பழனி அரசு மருத்துவமனையில் வைத்து கண்காணித்துக் கொள்வதாக உறுதி அளித்த பிறகே மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.