“கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட அதிமுக அரசு” – பிரேமலதா

 

“கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட அதிமுக அரசு” – பிரேமலதா

“கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட அதிமுக அரசு” – பிரேமலதா

கடலூர்

கொரோனா காலத்தில் அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்றது என்றும், அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாதசாமிக்கு தேமுதிக சார்பில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி கீரிடத்தை காணிக்கையாக செலுத்திய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

“கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட அதிமுக அரசு” – பிரேமலதா

அப்போது, தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சி நிறைகள் மற்றும் குறைகள் இணைந்த ஆட்சி தான் என்று தெரிவித்த அவர், ஆயினும் கொரோனா காலத்தில் அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்றதாகவும், அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து, ஜனவரியில் விஜயகாந்த் அறிவிப்பார் என்று கூறிய பிரேமலதா, தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக உள்ளதாகவும் தெரிவித்தார்..