கொரோனா ஒழிப்பில் அண்ணா பல்கலை.யுடன் கைகோத்த சென்னை மாநகராட்சி!

 

கொரோனா ஒழிப்பில் அண்ணா பல்கலை.யுடன் கைகோத்த சென்னை மாநகராட்சி!

சில தினங்களுக்கு முன்பு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை முழுவதும் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு சோதனை நடத்தப்பட்டது. ட்ரோன்கள் மூலம் வெற்றிகரமாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதே முறையில் சென்னையின் முக்கிய இடங்களில் கிருமிநாசினியைத் தெளிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைந்து கொரோனா ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை முழுவதும் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு சோதனை நடத்தப்பட்டது. ட்ரோன்கள் மூலம் வெற்றிகரமாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதே முறையில் சென்னையின் முக்கிய இடங்களில் கிருமிநாசினியைத் தெளிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

spraying-drone

இதற்காக சென்னை மாநகராட்சியானது அண்ணா பல்கலைக் கழகத்தின் உதவியை நாடியுள்ளது. அண்ணா பல்கலைக் கழகம் இதற்காக நான்கு ட்ரோன்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு ட்ரோன் மூலம் 50.000 சதுர அடி வரை மருந்து தெளிக்க முடியும். நான்கு ட்ரோன்களை பயன்படுத்தி சென்னையின் முக்கிய இடங்களில் கிருமி நாசினியைத் தெளிக்க உள்ளது மாநகராட்சி.