கொரோனாவை கட்டுப்படுத்தும் Favipiravir என்ற மருந்து!

 

கொரோனாவை கட்டுப்படுத்தும்  Favipiravir என்ற மருந்து!

பலி  எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்குகிறது. மேலும் இந்த வைரஸ் தொற்றால் இதுவரை  2 லட்சத்து 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனிலும் பலி  எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ttn

இந்நிலையில்  ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Fabipiravir என்ற மருந்து கொரோனாவை  கட்டுப்படுத்த பெரும் பங்கு ஆற்றியதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

ttn

FUJIFILM நிறுவனத்தின் துணை நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இம்மருந்தால் வுஹான்  நகரில் 340 பேர் குணமடைந்து இருப்பதாகவும், கொரானோவால் நுரையிரல் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 90% பேர் குணமடைந்து உள்ளதாகவும்  சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.